சனி, 6 பிப்ரவரி, 2016

தூய்மையான மகாமகம் - கும்பகோணத்தில் மினி மாரத்தான்

பிப்-5, மகாமகப் பெருவிழாவை தூய்மையான வகையில் கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மின மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியல் தொடங்கி மீண்டும் அக்கல்லூரியில் முடிவடையும் வகையில் 10கி.மீ தொலைவிற்கு இப்போட்டி நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் 10 இடங்களை வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விரிவான செய்திக்குறிப்புக்கு - தி இந்து தமிழ் நாளிதழ், தினகரன் (06.02.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக