மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பகல் நேரங்களில் லாரிகளை இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையையும், மகாமகப் பணிகளையும் கருத்தில் கொண்டு லாரிகள் மற்றும் வணிகம் தொடர்பாக பயன்படுத்தும் சரக்கு வாகனங்கள் பிப் 07 முதல் பிப் 23 வரை நாள் தோறும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கிக் கொள்ளவும், ஏற்றிக் கொள்ளவும் வேண்டும்.
தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களது வாகனங்களை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக