சனி, 6 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழா- இன்று அஸ்திர தேவர்கள் வீதியுலா ஒத்திகை

மகாமகத்தினையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காத வகையில் கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் வெகு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மகாமகப் பெருவிழாவையொட்டி அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள பணிகள் இனி மேற்கொள்ள வேண்டிய  பணிகள் குறித்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை சார்பில் பணி பகுப்பாய்வுக் கூட்டம் நேற்று (பிப்-5) நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் “மகாமகப்பெருவிழா 12 சிவன் கோயில்கள் , 5 வைணவ கோயில்களை உள்ளடக்கி நடப்பதால் 17 இணை ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கபட்பட்டுள்ளன. தொடர்புடைய கோயில்களின் உற்சவ விழா, தீர்த்தவாரி மற்றும் காவிரி ஆற்றுக்குச் செல்லுதல் போன்றவற்றை இந்த குழுக்கள் பொறுப்பேற்று நடத்தும்”  எனத் தெரிவித்தார்.


மகாமக குளத்துக்கு தீர்த்தவாரிக்குச் செல்லும் அஸ்திர தேவர்களைக் கொண்டு இன்று (பிப்-6) காலை 6 மணிக்கு அந்தந்த கோயில்களில் இருந்து வீதியுலாவாகச் சென்று ஒத்திகை நடத்திப் பார்க்கப்பட இருக்கிறது.

விரிவான செய்திக்குறிப்பு - தினத்தந்தி , தி இந்து தமிழ் நாளிதழ், தினகரன், தினமணி ( 06.02.2016)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக