சனி, 6 பிப்ரவரி, 2016

மரம் நடும் திட்டத்திற்காக மகாமகம் ரோட்டரி சங்கத்திற்கு வேன் - சிட்டி யூனியன் வங்கி சார்பில் வழங்கப்பட்டது

பிப் - 5 , கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் , கும்பகோணம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.  இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு வாகன வசதி செய்து தரும்பொருட்டு சிட்டி யூனியன் வங்கி ரூ. 5 லட்சம் மதிப்பிலான வேனை வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கலந்து கொண்டு வேனின் சாவியை ரோட்டரி சங்க தலைவர் கண்ணனிடம் வழங்கினார். அந்த வாகனத்தை வங்கியின் தலைவர் பாலசுப்பரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிட்டியூனியன் வங்கி திட்ட பொதுமேலாளர் பாலசுப்பரமணியன், மகாமக ரோட்டரி சங்க சாசன தலைவர் முகமது உசேன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விரிவான செய்தி குறிப்புக்கு - தினத்தந்தி (05.02.2016), திருச்சி பதிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக